டில்லி

ந்தியாவில் நேற்று 8,55,692 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையும் 38ஆக உயர்ந்துள்ளதுரு.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,350 பேர் அதிகரித்து மொத்தம் 3,48,97,860 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 202 அதிகரித்து மொத்தம் 4,76,636 பேர் உயிர் இழந்துள்ளனர்.   24 மணி நேரத்தில் 7,973 பேர் குணமடைந்து இதுவரை 3,41,30,768 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 91,456 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தும் கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,55,692 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 65,66,72,451 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.   தமிழகத்தில் நேற்று 1,01,165 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 5,54,96,025 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை  133 கோடியே  17 லட்சத்துக்கு 84ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 19,10,917 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.