டில்லி

ந்தியாவில் நேற்று 39,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,074 அதிகரித்து மொத்தம் 2,99,73,457 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,103 அதிகரித்து மொத்தம் 3,89,268 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 76,440 பேர் குணமாகி  இதுவரை 2,89,13,191 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 6,59,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,270 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,79,051 ஆகி உள்ளது  நேற்று 352 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,18,313 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,768 பேர் குணமடைந்து மொத்தம் 57,33,215 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,24,398 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 7,449 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,16,844 ஆகி உள்ளது.  இதில் நேற்று 94 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,155 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,155 பேர் குணமடைந்து மொத்தம் 27,04,554 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,867 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,11,320 ஆகி உள்ளது  இதில் நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,025 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,404 பேர் குணமடைந்து மொத்தம் 26,54,139 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,23,134 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 7,427 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,29,924 ஆகி உள்ளது  இதில் நேற்று 189 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,386 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,281 பேர் குணமடைந்து மொத்தம் 23,37,209 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,620 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,53,183 ஆகி உள்ளது.  நேற்று 44 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,363 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,504 பேர் குணமடைந்து மொத்தம் 17,82,680 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 58,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.