டில்லி

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,55,904 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 11,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,271 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,37,307 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 285 அதிகரித்து மொத்தம் 4,63,530 பேர் உயிர் இழந்துள்ளனர்.   24 மணி நேரத்தில் 11,376 பேர் குணமடைந்து இதுவரை 3,38,37,859 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,36,918 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தும் கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,55,904 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 62,37,51,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,01,034 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 5,25,42,503 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.