டில்லி

ந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,415 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,681 அதிகரித்து மொத்தம் 3,46,784 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,89,089 பேர் குணமாகி  இதுவரை 2,69,76,611 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 14,73,430 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 13,659 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,19,224 ஆகி உள்ளது  நேற்று 741 பேர் உயிர் இழந்து மொத்தம் 99,512 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,776 பேர் குணமடைந்து மொத்தம் 55,28,834 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,88,027 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 13,800 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,83,314 ஆகி உள்ளது  இதில் நேற்று 365 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,260 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 25,346 பேர் குணமடைந்து மொத்தம் 23,83,758 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,68,275 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 17,328 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,18,411 ஆகி உள்ளது.  இதில் நேற்று 209 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,720 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 24,003 பேர் குணமடைந்து மொத்தம் 24,40,300 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,980 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 21,410 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,16,812 ஆகி உள்ளது  இதில் நேற்று 443 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 32,472 பேர் குணமடைந்து மொத்தம் 19,32,778 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,57,463 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 10,373 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,49,363 ஆகி உள்ளது.  நேற்று 80 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,376 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,968 பேர் குணமடைந்து மொத்தம் 16,09,879 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,28,108 பேர் சிகிச்சையில் உள்ளனர்.