சென்னை:
ண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேசின்பிரிட்ஜ் அருகே ரயில் மேம்பாலம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சென்னை சென்ட்ரலுக்கு செல்ல வேண்டிய சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில், வரும் 11, 13ம் தேதிகளில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

கேரளா மாநிலம் பாலக்காடு – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், வரும் 13ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், வரும் 13ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா – கொச்சுவேலி விரைவு ரயில், வரும் 10ம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு செல்லாமல், கடற்கரை வழியாக சென்னை எழும்பூருக்கு செல்லும்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் – கேரளா மாநிலம் ஆலப்புழா விரைவு ரயில் வரும் 10, 12ம் தேதியில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்

அசாம் மாநிலம் நியூ தின்சுகியா – கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., வாராந்திர ரயில், பெரம்பூருக்கு வாராமல், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும்.

மத்திய பிரதேசம் இந்துார் – கேரளா மாநிலம் கொச்சுவேலி வாராந்திர ரயில், வரும் 12ம் தேதி, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.