“அந்த ஆறாவது குழந்தை ஆண் குழந்தை’’..

உத்தரபிரதேச மாநிலம் பாடூம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பன்னாலால்- அனிதா தம்பதிக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அனிதா, மீண்டும் கர்ப்பம் தரித்தார்.
நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுக்குப்  பிறக்கப்போகும் 6 வது குழந்தையும் பெண் தான் என அந்த ஊர் கோயில் பூசாரி ஆரூடம் கூறியதால்  அதிர்ச்சி அடைந்த பன்னாலால், பூசாரி சொல்வது உண்மையா என்பதை  அறிய மனைவியின் வயிற்றை அரிவாளால் அறுத்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி ஜப்தர்சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனிதாவுக்கு. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.
ஆனால் குழந்தை இறந்து விட்டது.
பூசாரி கூறியபடி அந்த குழந்தை பெண் குழந்தை அல்ல.
ஆண் குழந்தை.
பன்னாலால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அனிதா மற்றும் அவரது ஐந்து பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
பன்னாலால் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 மாத, கரு இறந்து விட்டதால், அவர் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
-பா.பாரதி