புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை.குணா இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புத்தகம், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக துரை.குணாவின் பெற்றோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் துரை.குணா இன்று அதிகாலை மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel