காந்திநகர்:  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று, நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக் போட்டியான குஜராத்  – பெங்களூரு அணிகளுக்கு இடையே  நடைபெறும் போட்டியை இலவசமாக காணலாம் என அதன் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உலகம் முழுவதும் பெண்களை போற்றும் வகையில், இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் கிரிக்கெட் போட்டியான  மகளிர் பிரீமியர் லீக்  (WPL)  போட்டியை இன்று மட்டும் காண அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஆண்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்றே, பெண்களுக்கும் இந்த ஆண்டு அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி,   மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டபிள்யு பிஎல் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மகளிர் பிரீமியர் லீக் தனது டிவிட்டரில், மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், GGvsRCB போட்டிக்கு அனைவருக்கும் இலவச அனுமதி என்று பகிர்ந்துள்ளது.