ஆலப்புழா:

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சாக்குலது காவு என்ற பழமையான கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பரில் பெண்ணை வழிபடும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கு நாரி பூஜை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த டிசம்பரில் தானு மாத முதல் வெள்ளிக் கிழமை அன்று இந்த பூஜை நடந்தது.

கோவிலின் தலைமை அர்ச்சகர் ராதாகிருஷ்ணன் நம்பூதிரி இந்த பூஜையை நடத்தினார். ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் ஆயிரகணக்கான பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபட்டனர். ஆண்டுதோறும் பிரபலமான ஒரு பெண்ணை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாக வரவழைத்து அவரை நாற்காலியில் அமர வைத்து, அந்த பெண்ணின் கால்களை ராதாகிருஷ்ணன் நம்பூதிரி கழுவி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

இந்த வகையில் இந்தாண்டு சுற்றுசூழல் நல ஆர்லவலர் வந்தனா சிவா கலந்துகொண்டு இந்த பூஜையை தொடங்கி வைத்தார். அவரது கால்களை, தலைமை அர்ச்சகர் கழுவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக விழாவை வந்தனா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இது குறித்து வந்தனா கூறுகையில், ‘‘இத போனற ஒரு நிகழ்ச்சி குறித்து எந்த ஒரு கோவிலிலும் நான் கேள்வி பட்டதும் கிடையாது, பார்த்ததும் கிடையாது. இந்த நிகழ்ச்சி எனது மனதை தொட்டுவிட்டது’’ என்றார். இதில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘உலகளவில் பெண்களை கேவலப்படுத்தும் துரதிர்ஷ்வட நிகழ்வுகளுக்கு இந்த பூஜை ஒரு நல்ல தகவலாக அமையும். இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். மனித நேய அடிப்படையில் எங்களது கோவிலில் மட்டும் தான் இந்த பூஜையை நடத்தி வருகிறோம்.

பெண்கள் மதிக்கப்படும் இடங்களில் கடவுளின் ஆசி கிடைக்கும். பல நூறு ஆண்டுகளாக கடைபிடி க்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாடகர் கே.எஸ்.சித்ரா, நடிகர் மஞ்சு வாரியர் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கல ந்தகொண்டு பூஜையை தொடங்கி வைத்துள்ளனர். முதன் முறையாக தற்போது சமூக ஆர்வலர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.