கென்யா
கென்யா நாட்டில் உலகின் மிகப்பெரிய விலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சர்வதேச அளவில் வன விலங்குகள் ஆப்ரிக்க காடுகளில் அதிக அளவில் உள்ளா. இங்கு மிகப் பிரம்மாண்டமான யானைகள், சிங்கங்கள், உள்ளிட்ட பல வன விலங்குகளும் டால்பின்கள், சுறாக்கள், மற்றும் கடல் ஆமைகளும் அதிக அளவில் உள்ளன.
குறிப்பாக கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் உள்ள காடுகளில் பல அபூர்வ வகையைச் சேர்ந்த வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றில் சிங்கங்கள், ஒட்டகச் சிவிங்கிகள், மற்றும் வெள்ளை காண்டா மிருகங்கள் அடங்கும்.
மேலும் இங்குள்ள கடல் வழியாக ஏராளமான சுறாக்கள், டால்பின்கள் மற்றும் அரிய வகை ஆமைகள் வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றன. எனவே இங்கு உலகின் மிகப் பெரிய விலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகச் சர்வதேச வனத்துறை அறிவித்துள்ளது.