டாக்கா:
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் பங்குபெறும் வீரர்கள் குறித்த விவரங்களை வங்காளதேச அணி இன்று அறிவிவித்து உள்ளது.
உலகமே எதிர்பார்க்கும், ஐசிசி உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டி வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை அணியில் ஆடும் வீரர்கள் குறித்து அதில் பங்கேற்கும் நாடுகள் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி. கவுன்சில் ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 23-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியா, இந்தியா தங்களது வீரர்களை அறிவித்துஉள்ள நிலையில், இன்று வங்காள தேச அணியும் தனது வீரர்களை அறிவித்துஉள்ளது.
வங்காள தேச அணி இன்று 15 பேர் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளது. மோர்தசா கேப்டனாக வும், ஷாகிப் அல் ஹசன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்காள தேச அணி விவரம்:-
1. மோர்தசா, 2. தமிம் இக்பால், 3. லிட்டோன் தாஸ், 4. சவுமியா சர்கார், 5. முஷ்பிகுர், 6. மெஹ்முதுல்லா, 7. ஷாகிப் அல் ஹசன், 8. மிதுன், 9. சபீர் ரஹ்மான், 10. மொசாடெக், 11. சாய்புதீன், 12. மெஹிதி, 13. ருபேல் ஹொசைன், 14. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 15. அபு ஜயேத்.