லண்டன்:

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்  இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். இது தென்னாப்பிரிகா அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகமே எதிர்பார்த்திருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ந்தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 நாடுகளின் அணிகள் பங்குகொண்டு ஆடி வருகின்றன.

இதுவரை 2 ஆட்டத்தில் பங்குகொண்டு ஆடிய தென்னாப்பிரிகா அணி, இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில், நாளை மறுநாள் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி காயம் காரணமாக விலகு வதாக அறிவித்து உள்ளார்.

கடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது, தசைப்பிடிப்பு காரணமாக இடையிலேயே வெளியேறிய நிகிடி  இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.