கவுகாத்தி:
நிர்வான புகைப்படத்தை சமூக வளை தளங்களில் பரப்பியதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் பாஜ எம்.பி ராம் பிரசாத் சர்மா ஆகியோர் மீது அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வந் மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் பெண் லட்சுமி ஒரங் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
gi
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கவுகாத்தியில் நடந்த ஒரு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட தனது ஆட்சேபத்திற்குறிய புகைப்படத்தை இவர்கள் சமூக வளைதளத்தில் பரப்பியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். சப் டிவிஷனல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்திய தண்டனை சட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கீழ் இந்த வழக்கை அவர் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து லட்சுமி ஒரங் கூறுகையில், ‘‘உண்மையை அறியாமல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த பதிவில் பாஜ சார்பில் நடந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர் என்று பதிவிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடியின் கட்சியை சேர்ந்த ஒரு முதல்வர் இப்படி செய்யலாமா’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அஸ்ஸாம் எம்.பி பிரசாத் சர்மா கூறுகையில், ‘‘அந்த சமயத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அதை நான் பகிர்ந்தேன். இதில் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை. நான் எவ்வித கருத்தும் அதில் தெரிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்ஸாம் முதல்வரை சந்தித்தபோது இந்த வழக்கை தூசி தட்டி மீண்டும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்’’ என்றார்.