நெல்லூர்:

துணை ஜனாதிபதி வெங்கைநாயுடு இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் வருவதற்காக விமானம் மூலம் ரேனி குண்டா வந்தார். அவருக்கு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வெங்கையா நாயுடு, சிவப்பு கம்பள வரவேற்பு ஏன்? என்று கேள்வி எழுப்பியவர்,  இதுபோன்ற வரவேற்புகள் இனிமேல் கொடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நெல்லூர் பயணமாக விமானத்தில் டெல்லியிலிருந்து ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார்.  விமான நிலையத்திலிருந்து ரேணிகுண்டா ரயில்நிலையம் சென்ற அவருக்கு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்கையா நாயுடு, இனிமேல் இதுபோன்ற வரவேற்பு எல்லாம் கொடுக்கவேண்டாம் என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.

பின்னர் ரேனிகுண்டாவில் இருந்து  ரயில்மூலம் நெல்லூருக்குப் பயணமானார்.