குவாஹாத்தி: முன்னாள் முதல்வர் தருண் கோகாய், தனது கட்சியான காங்கிரஸ் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (NRC) கடுமையாக எதிர்த்த நிலையிலும், சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவது குறித்து 27ம் தேதியன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று அவர்கள் (பாஜக தலைவர்கள்) குற்றம் சாட்டுகிறார்கள். சரி, அப்படியானால் நீங்கள் ஏன் அவர்களைக் கண்டுபிடித்து நாடு கடத்தக்கூடாது?” கோகோய் இங்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

“சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவதாக மத்திய அரசு உறுதியளித்தது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் உறுதியளித்தனர். நீங்கள் ஏன் அவர்களை அடையாளம் காணவில்லை? உங்களை யார் தடுத்தது? “, என்று அவர் கேட்டார்.

தடுப்புக்காவல் நிலையங்கள் இல்லை என்ற பிரதமர் மோடியின் கூற்றுக்கு பதிலளித்த கோகோய், “அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பு முகாம்கள் உள்ளன” என்று கூறினார்.

“சிறைச்சாலையை நிறைவு செய்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வைத்திருக்க தடுப்புக்காவல் நிலையங்கள் கட்டுமாறு 1998 ஆம் ஆண்டில் மையத்தில் உள்ள பாஜக அரசு உத்தரவிட்டது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சரின் இந்த எதிர்வினை, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண முற்படும் என்.ஆர்.சி.யின் நாடு தழுவிய செயல்பாட்டை எதிர்ப்பதான காங்கிரஸின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணானது.

அசாமில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் என்.ஆர்.சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்ட இறுதி என்.ஆர்.சி-யில் இருந்து 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.