வாஷிங்டன்

மெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சுமார் 81 வயதாகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டார், அந்த மாநாட்டில் அவர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து நாட்டில் துப்பாக்கி வன்முறை அதிகரிப்பதை கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,

 “அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்  டெலாவேருக்குத் திரும்பி அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்”

என்று தெரிவித்துள்ளது.

ஜோ பைடன் தனது எக்ஸ் வலைதளத்தில்,

“இன்று மதியம் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன்”

என்று பதிவிட்டுள்ளார்.