புனே: கடந்த 3 மாதங்களாக, போட்டி மிகுந்த ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெறாதிருந்த கேஎல் ராகுல், தனது தயாரிப்பு நிலையில் நம்பிக்கை வைத்ததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் அரைசதமடித்ததோடு அல்லாமல், ஒரு விக்கெட் கீப்பராக முக்கிய கேட்சுகளையும் பிடித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, “ஒரு பேட்ஸ்மேனாக, நான் நடுவில் இருப்பதாக உணர்வதோடு, எனக்குப் பிடித்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். எனக்கு, சமீப காலங்களில், விளையாடுவதற்கான சரியான வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், அது எனது மனதை பாதிக்கவில்லை.

நமக்கான சிறந்த வழி எது என்பதைக் கண்டறிந்து, நாம் அதில் பயணப்படுவது அவசியம். இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதென்பது மிகவும் சவாலான விஷயம். எனவே, நமக்கு ரிலாக்ஸ் என்று எதுவுமில்லை. நாம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, நமக்கான வாய்ப்பை இறுகப் பற்றிக்கொள்ள வ‍ேண்டும்” என்றுள்ளார் ராகுல்.