டெல்லி: 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில்  (ஜனவரி முதல் மார்ச் வரை) 2 கோடியே 23 லட்சத்து 10ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து உள்ளது.

மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் எல்எல்சி இந்தியாவில் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 2,23,10,000 கணக்குகளைத் தடை செய்தது என்று நிறுவனம் அதன் மாதாந்திர  அறிக்கையில்  தெரிவித்து உள்ளது. கடந்த  மார்ச் மாதத்தில் மட்டும், வாட்ஸ்அப் 7,954,000 கணக்குகளை தடைசெய்தது, அதில் 1,430,000 முன்கூட்டியே தடைசெய்யப்பட்டது என்று நிறுவனம் அதன் அறிவிப்பில்  குறிப்பிட்டு உள்ளத.

அதாவது, இதேக்காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு (2023) ஜனவரி  மாதம் 29 லட்சமும், பிப்ரவரி மாதத்தில் 45 லட்சமும், மார்ச் மாதத்தில் 47 லட்சமும் என ஒட்டுமொத்தமாக 1,22,31,306 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு, அது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது.

இது குறித்து வாட்ஸ்ஆப் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 2,23,10,000 கணக்குகளைத் தடை செய்தது என்று நிறுவனம் அதன் மாதாந்திர  அறிக்கையில்  தெரிவித்து உள்ளது. கடந்த  மார்ச் மாதத்தில் மட்டும், வாட்ஸ்அப் 7,954,000 கணக்குகளை தடைசெய்தது, அதில் 1,430,000 முன்கூட்டியே தடைசெய்யப்பட்டது என்று நிறுவனம் அதன் அறிவிப்பில்  குறிப்பிட்டு உள்ளத.

ஒருவேளை உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்ததும், அதில், உங்கள் கணக்கில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த அனுமதியில்லை என்ற தகவல் வரும். எங்களது விதிமுறைகளுக்கு மாறாக ஒரு வாட்ஸ்ஆப் கணக்கு செயல்பட்டால் அதனை நாங்கள் நீக்கிவிடுவோம். அதாவது ஸ்பேம், ஸ்கேம் போன்றவற்றில் ஈடுபடும் வாட்ஸ்ஆப் கணக்குகள் மூலம் பிற பயனர்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் தொழில்துட்பத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.