டெல்லி: 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு மருந்துகள்,  உபகரணங்களுக்கு வசூலிக்கப்படும்  ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு கோரப்பட்டது. மேலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய  4,321 கோடி ரூபாய் நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக  ஸ்டாலின் தலைமையன  புதியஅரசின்  நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக கலந்து கொண்டு பேசினார். அப்போது,

அப்போது, மாநிலங்கள் இல்லாம் ஒன்றியம் இல்லை என்பதை யுனியன் அரசு புரிந்து கொள்ளவேண்டும். மத்தியஅரசுக்கு எனதனியாகவாக்காளர்கள் கிடையாது, மனக்கசப்புடனும், வேண்டாவெறுப்புடனும் நன்கொரையாளராக யூனியன்அரசு செயல்படமுடியாது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய  4,321 கோடி ரூபாய் நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எஎன காட்டமாக பேசினார்.

அவர் பேசிய முக்கியமான பகுதிகளில் வருமாறு

ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு வடிவமைப்பானது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது. செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன. எந்தவொரு வரிசையிலும் இல்லாமல், அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன் (இது முழுமையானது அல்ல)

1. ஜிஎஸ்டி கட்டமைப்பின் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும்.

2. ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது. மேலும் உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.

3. தனித்தனியாக இயங்கும் கண்காணிப்பு / அமலாக்க மாதிரி (மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆய்வாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு இடையில்) எளிமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டும்.

4. கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் கொண்ட சட்டங்களை விதித்துள்ளதன் மூலம் அமைப்பிலுள்ள குறைபாடுகளை ஈடுசெய்யும் உத்தி, சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டாளர்களைத் அதற்கெதிராக சிந்திக்கத் தூண்டியுள்ளது.

5. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

6. ஜிஎஸ்டி செயலகத்தின் வடிவமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலித்து, பல மடங்கு வலுப்படுத்த வேண்டும்.

7. கூட்டத்திற்கு முன் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல், அல்லது, ஒருமித்த கருத்தை அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு பிரச்சினையும் ஜிஎஸ்டி மன்றத்திற்கு கொண்டுவரப்படும் தற்போதைய செயல்முறை பலவீனமாக உள்ளது.

மேலும், 10 நபர்களைக் கொண்ட இந்த குழு அதிகபட்சம், மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் கூடுகிறது. “மன்றத்தின் ஒப்புதல்” என்ற இறுதி இலக்கை நோக்கி இன்னும் தொடர்ச்சியான, செயல்திறன் கொண்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வழிமுறைகளை கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு இயங்க வேண்டும். அலுவல் ரீதியிலான குழுக்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டும்.

8. மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளுக்கு மாற்றாக, வரி ஆராய்ச்சி பிரிவு போன்ற, ஜிஎஸ்டி மன்றத்திற்கு நேரடி தொடர்பில்லாத அமைப்புகளுக்கு அதிக அளவில் அதிகாரம் அளிப்பது, அரசியலமைப்பின்படி சட்டபூர்வமான தன்மை மற்றும் அடிப்படைத் திறன் ஆகிய கேள்விகளை எழுப்புகின்றது.

மேற்கண்ட பிரச்சினைகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவது ஆகும்.

ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் (குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் ஒரு மாநிலத்தில் குடியேறிய ஒவ்வொருவரிடமிருந்தும்), மாநிலங்களின் பங்கு கணிசமாகக் குறைந்தமை, மாநில அரசின் வரிவிதிக்கும் மற்றும் வருவாய் ஈட்டும் அதிகாரத்தின் மீதான அணுகுமுறையில் ஒன்றிய அரசின் “நன்னம்பிக்கை இல்லாமை”, குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை சமரசம் செய்வதில், கருணையின்மை மற்றும் பரிவின்மை கொண்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை, ஆகியவற்றினால் இந்த சீரழிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.,