சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்துதுறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி இன்றும், நாளையும் சேர்த்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

சென்னை உள்பட நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலோர், விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் கோயம்பேடு உள்பட பல நகரங்களில் உள்ள தொலைதூரப் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு, வார இறுதி நாட்களில்  600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு பயணிகள் சென்றுவருவதற்கு வசதியாக  இன்றும், நாளையும்  (ஜூலை 15 மற்றும் 16) தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.