மும்பை: புதிய இந்தியாவை உருவாக்குவது குறித்து அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய இந்தியா உருவாக்கப்படும் என நமக்காக வாக்குறுதியளிக்கப்பட்டது. அதன்பொருட்டு, முன்னோக்கி நகரக்கூடிய கொள்கைகள் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் செயல்முறைப்படுத்தப்படவில்லை.

போதுமான மூலதனம் மற்றும் நேரம் போன்றவை அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், நமக்காக வாக்களிக்கப்பட்ட புதிய இந்தியாவை உருவாக்கும் செயல்பாட்டில், நாமெல்லாம் ஒன்றி‍ணைந்து செயல்பட வேண்டும்.

ஒருவர், இன்னொருவருடன் ஏதேனுமொரு வியாபாரத்தில் கூட்டுசேர விரும்பினால், முதலில், அந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்பதை யோசித்துவிட்டே கூட்டுசேர வேண்டும்.

மேலும், அந்த வியாபாரம் சரியாகப் போகவில்லை என்றால், அதை எப்போது கைவிடுவது என்பது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்” என்றார்.

– மதுரை மாயாண்டி