download (7)

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை நிராகரிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சார்பில், அக் கட்சியின்   மத்தியக்குழு உறுப்பினர் பினராய் விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின் பினராயி விஜயன் முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பிறகு  துணை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அடுத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்த பினராயி விஜயன் பிறகு  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “முல்லைப்பெரியாறு அணை தேவையான அளவு பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை நிராகரிக்க முடியாது.  “அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் முதல் பிரச்சனை. மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு பிரச்சினை அணுகப்பட்டது. ஆய்வு முடிகளின் தன்மையை பொருத்தே பிரச்சனையை அணுக முடியம்’ என்று தெரிவித்தார்.