வீட்டில் பூஜை

பெங்களூரு :

ர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலையிலேயே எழுந்த எடியூரப்பா தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பூஜை செய்து  வணங்கினார்.

அதைத்தொடர்ந்து சிகர்பூரில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவிலின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

கோவிலில் சாமி தரிசனம்

அதைத்தொடர்ந்து ஷிமோகா தொகுதியி்ல் தனது வாக்கை  பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, இன்று நல்ல நாள் என்றார்.  கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும்,  150 தொகுதிகளுக்கு மேல்  வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்றார்.

வரும் 17ந்தேதி பதவி ஏற்பு நடைபெறும் என்றும் நம்புவதாக கூறினார்.