டெல்லி: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை, இது ஜனநாயகத்தின் மீதான துரதிருஷ்டவசமான படுகொலை என என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

12எம்பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய்சவுக் வரை பேரணி நடத்தினர். பேரணியில் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,  12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது,  இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாகும். அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் அமளிகளுக்கு இடையே மசோதாக்களுக்குப் பின் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது பாராளுமன்றத்தை நடத்தும் முறையல்ல. பிரதமர் சபைக்கு வருவதில்லை.  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு)  அனுமதி இல்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை என்று விமர்சித்தார்.

லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து பேசிய ராகுல்காந்தி,  ஒரு அமைச்சர் விவசாயிகளைக் கொன்றார். அது பிரதமருக்கு  தெரியும். உண்மை என்னவெனில், 2-3 முதலாளிகள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று தெரிவித்தவர், இடைநீக்கம் செய்யப்பட்ட 12  எம்.பி.க்கள் RS தலைவரால் அல்லது பிரதமரால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல, மாறாக விவசாயிகளின் வருமானத்தைத் திருட நினைக்கும் சக்தியால் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற விஷயங்களில், பிரதமரும் தலைவரும் வெறும் செயல்படுத்துபவர்கள்தான்.

இவ்வாறு ராகுல்காந்தி விமர்சித்தார்.

12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி…