Skip to content
  • Fri. Feb 6th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

Apr 18, 2020
திருச்சி:
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி இடை  நிற்றலில்  இந்தியாவில் தமிழ்நாடு தான்  குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக்  தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்  என்றார்.
 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில்  உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும்,  விளையாட்டு  வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை  அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில்  5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள  பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர்,  இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]

Post navigation

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…
அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

Related Post

தமிழ் நாடு

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விட்டு வரி பாக்கி வசூலிக்கப்படும்! வருமான வரித்துறை

தமிழ் நாடு

மக்களுக்காக 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! திமுக அரசின் சாதனை

தமிழ் நாடு

இடைக்கால பட்ஜெட், ரூ. 34,237 கோடி முதலீடு மற்றும் 15 திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

உலகம்

உலகம்

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?

February 4, 2026 Sundar
இந்தியா உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

February 4, 2026 Sundar
இந்தியா உலகம்

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தக வரி 25%லிருந்து 18%மாக குறைக்கப்படும்… பிரதமருடன் பேசிய பிறகு டிரம்ப் அறிவிப்பு…

February 3, 2026 Sundar
உலகம்

ரூ. 13000 கோடி முடக்கம்… தங்க வர்த்தக மோசடியில் சிக்கிய சீனாவின் JWR விவகாரத்தில் நடந்தது என்ன ?

January 30, 2026 Sundar
உலகம்

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஹாங்காங்கின் CK ஹட்சிசன் பனாமா துறைமுக உரிமைகளை இழக்கும் அபாயம் உள்ளது

January 30, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer