விர்ஜினியா:

மெரிக்கா விர்ஜினியா நகர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பரிதாபமாக  பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.

விரிஜினியா கடற்கரை பகுதியில் உள்ள நகராட்சி மையத்தில்  மர்ம நபர் நுழைந்து திடீரென துப்பாக்கியால் சரமாரியாக  சுட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து நகராட்சி மையத்தில் உள்ள ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும், இந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் சுட்டுகொன்றதாகவும் கூறப்படுகிறது.  காயமடைந்த வர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.