திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் சிலை அகற்றப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு மலை

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது அனைவரும் அறிந்ததே.  இதைப் போல் திருச்செங்கோடு மலை அடிவாரத்திலும் பக்தர்கள் கிரிவலம்  செய்வது வழக்கமாகும்.

இந்த கிரிவலப் பாதையில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது.  இந்த தேவாலயத்தில் சுமார் 30 ஆண்டுகளாகக் கிறித்துவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.  இந்த தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் ஒரு விநாயகர் சிலையை நிறுவினர்.

இதற்கு கிறித்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.  இந்த தர்ணாவில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டது.  இதையொட்டி தற்போது அந்த விநாயகர் சிலை தேவாலயத்தின் அருகில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.