டில்லி

வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ஐசிஐசிஐ வங்கிஅதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டது தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் வீடுகளில் மத்திய அமலாக்கத்துறை ஏற்கவே ரெய்டு நடத்தியது.

இந்த நிலையில் சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய குற்றச்சாட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஐசிஐசிஐ தலைமைப் பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார். நீதியரசர் பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு, சாந்தா கோச்சார் விதிகளை மீறியிருப்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிதி மோசடியின் மூலம், சாந்தா கோச்சாரும், அவரது கணவரும் ஆதாயம் அடைந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சாந்தா கோச்சாரின் மும்பை வீடு, அவரது கணவரின் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் உள்ளிட்ட 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சிஐசிஐ வங்கியின் தலைவராக சந்தா கோச்சர் பணிபுரிந்த போது, வீடியோகான் நிறுவனத் துக்கு ரூ. 3250 கோடி மதிப்புள்ள கடன் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகை 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுகளுக்கு இடையே பல தவணையாக கொடுக்கப்பட்டு உள்ளது. கடனை வாங்கிய வீடியோக்கான் நிறுவனம், அதை திருப்பி செலுத்த வில்லை. இதுகுறித்து வங்கி தலைமை அளித்த புகாரின்பேரில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை  விசாரணை நடத்தி வந்தது.

இதுதொடர்பான விசாரணையை அடுத்து, சந்தா கோச்சார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மற்றும் அவரது கணவர் வீடியோகான் அதிபர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் வெளிநாடு தப்பிவிடாதபடி லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தா கோச்சாரின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.