குவரஸ், பெரு

னிதர்களைப் போல் எலி ஒன்று சோப்பு போட்டு குளிக்கும் அதிசய வீடியோ தற்போது இணயதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரு நாட்டில் உள்ள குவரஸ் என்னும் நகரில் ஒருவ்ர் தனது வீட்டு பாத் ரூமில் குளிக்கச் சென்றுள்ளார்.   அப்போது பாத் ரூம் சிங்க் உள்ளே ஒரு எலி மனிதர்களைப் போல சோப்புப் போட்டுக் குளிப்பதைப் பார்த்துள்ளார்.    அதை விடியோவாக எடுத்து இணையத்தில் பதிந்துள்ளார்.

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை எடுத்தவர் பெயர் ஜோஸ் கோர்யா ஆகும்.   இவர், “நான் வழக்கம் போல குளிக்கச் சென்ற போது எனது பாத்ரூம் சிங்கில் எலி ஒன்று மனிதர்களைப் போல் சோப் போட்டு குளிக்கும் அதிசயத்தைக் கண்டேன்.    அந்த எலியை விரட்டாமல் வீடியோவாக எடுத்து பதிந்துள்ளேன்”  எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைக் காண்பவர்களில் சிலர் இது கிராபிக்ஸாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

[youtube https://www.youtube.com/watch?v=LhpHunEWCLg]