புதுடெல்லி:
குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.