டில்லி

ன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பல அரசியல் மற்றும் கலையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆகியோர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.

இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து அவர் தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருடைய மனைவிக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.