சென்னை

மிழகத்தை சேர்ந்த மூத்த பத்திரிகியாளர் கோபிநாத் மரணம் அடைந்தார்.

தமிழகத்தை சேர்ந்த ஈ கோபிநாத் க்டந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணி புரிந்து வருகிறார். அவர் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பணிகளை தொடங்கி உள்ளார்.

கோபிநாத் சுதந்திரத்துக்கு பின் பிடிஐ நிறுவனத்துக்காக நாட்டின் முதல் தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்கிய பெருமைக்குரியவர் ஆவார்.  அவர் ஏ என் ஐ செய்தி நிறுவனத்தின் தமிழக ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணி ஆற்றி உள்ளார்.

உலகப் புகழ் பெற்ற தலைவர்களான பிடல் காஸ்டிரோ, சே குவாரோ ஆகியோரை பேட்டி கண்ட ஒரே தமிழ் செய்தியாளர் என்னும் புகழையும் கோபிநாத் பெற்றுள்ளார்.

தற்போது 88 வயதாகும் கோபிநாத் முதுமை காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவருக்கு அனைத்து பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.