புவனேஸ்வர்:
வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒடிசா கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக, ஒடிசா மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வருகின்ற மே 2 ஆம் தேதி(திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும், அதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றும் ஒடிசா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.