திருவனந்தபுரம்,

கேரளாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று லைநிறுத்தம் நடைபெறுவதால், போக்குவரத்தின்றி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த வேலை நிறுத்தத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அழைத்து விடுத்துள்ளன. அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் அரசு பஸ் போக்குவரத்தும் முடங்கி உள்ளது.

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகனங்கங்களை இயக்குபவர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று  வாகனங்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று காலை தொடங்கி உள்ள இந்த வேலை நிறுத்தம் மாலை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கேரளாவில், அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உள்பட, தனியார் நிறுவன வாகனங்களும்  இயக்கப்படவில்லை.

அதுபோல,  தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.