போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகனில் இன்று நடைபெற்றது.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, அயர்லாந்தின் ஜனாதிபதி மைக்கேல் டி ஹிக்கின்ஸ், அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே, ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர்.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதி நிகழ்ச்சியில் பிரெஞ்சு மொழி அகர வரிசைப்படி இவர்களுக்கு இருக்கை வழங்கப்பட்டிருந்தது.

அதில் இந்தியா, ஹங்கேரி, காபோன், பிரான்ஸ், பின்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது.

பிரெஞ்சு அகர வரிசைப்படி உக்ரைன் அதிபருக்கு மூன்றாவது வரிசையில் தான் இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதும் அவருக்கு முன் வரிசையில் இடம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சில நெறிமுறைகளை வாடிகன் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

தனது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கியுடன் ரோம் வந்த உக்ரைன் அதிபருக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமர்ந்திருந்த அதேவரிசையில் ஜெலென்ஸ்கிக்கும் இடமளிக்கப்பட அதேவேளையில், பிரிட்டன் பிரதிநிதிகளுக்கு முன் வரிசையில் இடமளிக்கப்படவில்லை.

மன்னர் சார்லஸ் III பிரதிநிதியாக அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு மூன்றாவது வரிசையில் அகர வரிசைப்படி இடம் வழங்கப்பட்டது.

ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்சுக்கும் அதே வரிசையில் இடம் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி லேடி ஸ்டார்மர் ஆகியோர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுடன் ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் முன் வரிசையில் இடம் வழங்கிய வாடிகன் நிர்வாகத்தின் நெறிமுறை மீறல் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், அந்த இடம் காலியாக இருந்ததாகவும் அதை அவருக்கு வழங்கியதாகவும் கூறி சமாளித்து.

இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா முன் வரிசையில் இருந்தார், அதே நேரத்தில் நாட்டின் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, அரசாங்கத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிகள் மற்றும் அரச குடும்பத்தினர் போன்ற அரச தலைவர்கள் தொடர்பான நெறிமுறையைக் கடைப்பிடிக்கும் வகையில் சற்று பின்னால் அமர்ந்திருந்தார்.

போப் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் இடையே டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் தனியாக சந்தித்து விவாதம் நடத்தியது பலரின் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.