இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்புக்கான கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மோடி அவசரமாக கூட்டினார்.

மேலும், தாக்குதல் தொடர்பான விவரங்கள் பல்வேறு வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீவிரவாதிகள் உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி சபதமேற்றுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளால் கலக்கமடைந்துள்ள பாகிஸ்தான் தனது ராணுவத்தை தயார் படுத்தி வருவதுடன் அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர்.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியா செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்ற எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.