ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது, இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல்களின்படி, பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த மிகப்பெரிய வெடிப்பின் காரணமாக, பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து விழுந்தன, வீடுகள் மற்றும் அலுவலகங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலை அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெரிய கரும்புகை மேகம் காணப்படுகிறது.

ஈரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ராஜாய் துறைமுகத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்புக்கான காரணத்தை அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை.