பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார்.

“எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் திறந்திருக்கிறது” என்று அபோதாபாத்தில் உள்ள இராணுவ அகாடமியில் நடந்த ஒரு விழாவின் போது ஷெரீப் கூறினார்.

அதேவேளையில், நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராக உள்ளதாகவும், 2019 பிப்ரவரி மாதம் இந்தியா நடத்தியது போல் ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்த நினைத்தால் பதிலடி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“சர்வதேச ஆய்வாளர்கள்” நடத்தும் எந்தவொரு விசாரணைக்கும் இஸ்லாமாபாத் “ஒத்துழைக்கத் தயாராக” இருப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியதைத் தொடர்ந்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சனிக்கிழமை பல பயங்கரவாதிகளின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதாகக் கூறப்படுகிறது.