சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்துதல் 100% நிலையை அடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில்  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கேரள உள்பட சில மாநிலங்களில் சற்று உயர்ந்து வருகிறது. மேலும், சீனா உள்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது,  உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை கோட்பாடு களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாவிட்டால் அவர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.

முதல் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 1.32 கோடி பேரை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துதல் 100% நிலையை அடைய வேண்டும் என்றும்,   கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.