டேராடூன்

த்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார்.

இவர் மீது லஞ்சப் புகார் எழுந்துள்ளது.

இதை முதல்வர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று பதியப்பட்டது.

அதில் முதல்வர் மீது வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவிடக் கோரிக்கை இடப்பட்டது.

இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதையொட்டி முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.