சாமோலி:
த்தரகாண்ட் மாநிலத்தில் மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் தற்போது சாமோலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாட்ட எஸ்பி சாமோலி பரமேந்திர தோவல் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.