லக்னோ:  உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும்இதுவரை இல்லாத வகையில் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1000ஐ தாண்டியுள்ளது. பல மாநிலங்களிலும் தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது.
உ.பி. மாநிலத்திலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  மாநில முதல்வர் யோகிக்கும் தொற்று பரவல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.