மினியாபோலிஸ்:
மெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாய்டு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டெரிக் சாவினை, கடந்த ஏப்ரல் மாதம் குற்றவாளி என மின்னசொட்டா நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு தண்டனை விவரம் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மின்னசொட்டா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.