போகோடா:
கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன் குகுட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

அப்போது போதை பொருள் தயாரிப்புக்கு பேர் பெற்ற கட்டடும்போ மாகாணம் வழியாகப் பறந்த போது ஹெலிகாப்டர் மீது சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் காயம் அடையாத நிலையில், ELN போராளிகள் இதனை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.