வாஷிங்டன்

மெரிக்க ராணுவ தலைமையகம் இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று  அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மையத்தின் ஊடக துணை செயலாளரான சபரீனா சிங் செய்தியாளர்களிடம்,

”இந்தியாவுடன் நாங்கள் ஒரு சிறந்த ராணுவ உறவையும் மற்றும் நல்ல முறையிலான தொடர்புகளையும் கொண்டிருக்கிறோம்.மேலும் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணிக்க இருக்கிறோம். ஆயினும், அதுபற்றிய முன்னேற்றத்திற்குரிய தகவல்கள் எதனையும் பகிர்வதற்கான அதிக விவரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. 

பாகிஸ்தான் தேர்தல் விஷயத்தில் என்ன நடக்கிறது என நாங்கள் நிச்சயம் கவனித்து வருகிறோம்.  அதுபற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  

இந்திய தளபதியின் தற்போதைய பயணத்தின்போது, அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் உடன் உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார். மேலும் அவர் பிற மூத்த ராணுவ அதிகாரிகளுடனும் உரையாடுவார்” 

என்று தெரிவித்துள்ளார்.