புலாம் பென்

ம்போடியாவில் தினசரி சராசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இன்று  கம்போடியா தேசிய எய்ட்ஸ் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் தெற்காசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,

“கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 பேர் புதிதாக எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 4 பேர்  எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுகின்றனர்.  எச்.ஐ.வி.யால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.  தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு மூத்த அமைச்சரும் தேசிய எய்ட்ஸ் ஆணையத்தின் தலைவருமான இங் மவுலி, கம்போடியா ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், 2025 க்குள் 95-95 இலக்குகளை அடைவதற்கும் உறுதி பூண்டுள்ளது என்று சமீபத்தில் கூறினார்.

இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் தங்கள் எச்.ஐ.வி. நிலையை அறிந்திருக்கிறார்கள், இந்த 95 சதவீதம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்கிறார்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்தவர்களில் 95 சதவீதம் பேர் உயிர்காக்கும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் உள்ளனர்.