வாஷிங்டன் 

மெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளித்தது. எனவே நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு நான் செல்வதைத் தடுக்கும் விதமாகத் தீய எண்ணத்துடன் முயற்சி நடைபெறுகிறது எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்கத் தலைநகரில் வெடித்த வன்முறை மற்றும் கிளர்ச்சியில் பங்கேற்ற 1,000க்கும் மேற்பட்ட டிரம்ப் ஆதரவாளர்களும் திரண்ட அதே வாஷிங்டன், டி.சி., நீதிமன்றத்தில் அவரது கைது மற்றும் விசாரணை இன்று நடந்தது.

வழக்கு விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை மாற்றியமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சிகள் எவருடனும் சட்ட வாயிலாகத் தொடர்பு கொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட மிகக் குறைந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் அதிபர் டிரம்ப் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.