டெல்லி: உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதியம் 1மணி அளவில் 5 மாநிலங்களிள் கட்சிகளின்  வாக்கு எண்ணிக்கை நிலவரம் 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை பெற 202 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில்  பாஜக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அங்கு பாஜக  267  இடங்களில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 124 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், அங்கு ஆம்ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிரோன்மணி அகாலிதளம் 6 இடங்களிலும், பாஜக 3  இடங்களிலும்  முன்னணியில் இருந்து வருகிறது.

70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அங்கு பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், பிஎஸ்பி 1 இடத்திலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 3 இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும்  முன்னணியில் இருந்து வருகிறது.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது உள்ளது. பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10  இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 9 இடங்களிலும் மற்றவை 12 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.