வாரணாசி:
மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

உள்ளூரை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில், சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர் மீது கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் பெலூபூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோவிற்கும் சுந்தர் பிச்சை உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலிருந்து அவர்களது பெயர்களை காவல்துறை நீக்கியுள்ளது.