உத்தரப்பிரதேசம்: 
த்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
 உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில், தேர்தலுக்கு முன்பு, ‘ஹம் வச்சன் நிபாயேங்கே’ என்ற தலைப்பில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் சார்பில்  ‘காங்கிரஸ் ப்ரதிஜ்யா யாத்திரை’ மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.